ஐயா, கொஞ்சம் தொகுதி பக்கமும் வாங்க...

>> Saturday, October 18, 2008


ஷோரூம் திறப்பு விழாவிற்கு மட்டும் வரும் எம்.எல்.ஏக்களுக்கு....
தேர்தல் முடிஞ்சு முழுசா 3 வருஷம் ஆகப் போகுது. வீர வசனம் பேசி, ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆனவர் இதுவரை காணலை. நம்மாளும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ஆப்பு வாங்கிக் கொண்டான். மக்களுக்கு என்ன தேவை என்பதில் அக்கறையே இல்லாத ஆளெல்லாம் எம்.எல்.ஏ ஆகிட்டான், மினிஸ்டர் ஆகிட்டான் என வேதனைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
தொகுதி பக்கம் வராத எம்.எல்.ஏ மூஞ்சியை போஸ்டரிலும், தினசரி பேப்பர் விளம்பரத்திலும் மட்டும் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏதாவது ஒரு ஷோரூம் திறப்பு விழா, பணக்காரர் வீட்டு திருமண விழா, தனியார் பள்ளி, கல்லூரி ஆண்டு விழா இங்கெல்லாம் நம்மாளை (அதான் எம்.எல்.ஏ) பார்க்கலாம்.
ஆனால் மக்கள் பிரச்னைக்கு வாருங்கள் எனக் கூப்பிட்டால், சென்னைக்கு போகிறோம், டெல்லியில் மீட்டிங் என ஏதாவது ஒரு கதை அளப்பார்கள். தொகுதியிலுள்ள கிராம மக்கள் குடிக்க தண்ணி இல்லாம கஷ்டப்படுகிறார்கள் என்ற கவலை எல்லாம் அவர்களிடம் இல்லை. யார் பணம் தருகிறார்களோ அவர்கள் வீட்டு விஷேசத்திற்கு மட்டும் தான் போவேன் என சத்தியம் ஏதாவது செய்திருப்பர்கள்.
ஷோரூம் உரிமையாளர்கள் கொடுக்கும் பணத்தை நாமும் (கிராம மக்கள்) கொடுத்தால் தான் தொகுதி பக்கம் தலை காட்டுவார்கள் போலும். எம்.எல்.ஏக்களுக்கு ஒரு வேண்டுகோள்! தொகுதி பிரச்னைக்கு குரல் கொடுக்கிற மாதிரி மக்களிடம் நடிக்கவாவது செய்யுங்கள், அப்போது தான் அடுத்த முறை டெபாசிட் ஆவது வாங்க முடியும்.
-கருவாச்சி...

0 comments: